அம்பத்தூர்: செங்கல்பட்டு அடுத்த செய்யூர் பகுதியில் வசித்து வருபவர் ரோஸி (28). ஆங்கிலோ இந்தியன். இவர், கடந்த 6ம் தேதி வில்லிவாக்கம் பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். இதுபோல் ரோஸியின் உறவுக்காரரான ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் கேரி க்ளார்க் (51) என்பவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துள்ளார்.
இருவரும் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்ததால் வெகுநேரம் பேசியுள்ளனர். அப்போது, ‘உன்னிடம் தனியாக பேசவேண்டும்’ என கூறி ரோஸியை ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பேசிக்கொண்டிருந்தபோது திடீரென ரோஸியின் கையை பிடித்து இழுத்து கேரிக்ளார்க் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.