திருத்தணி பஜார் பகுதியில் மதுபாட்டில் விற்றவர் கைது

திருத்தணி: திருத்தணி பஜார் பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். திருத்தணி பகுதியில் கள்ளமார்க்கெட்டில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ் பி சிபாஷ்  கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்படி, எஸ்ஐ குமார் தலைமையில் போலீசார் நேற்று திருத்தணி கமலா தியேட்டர் பகுதியில் கண்காணித்தனர்.

அப்போது அந்த பகுதியில் மதுபாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தபோது வெங்கடேசன் (48) என்று தெரிந்தது. டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்துவந்தது தெரிந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன்பிறகு வெங்கடேசனை திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: