திருத்தணி: திருத்தணி பஜார் பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். திருத்தணி பகுதியில் கள்ளமார்க்கெட்டில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ் பி சிபாஷ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்படி, எஸ்ஐ குமார் தலைமையில் போலீசார் நேற்று திருத்தணி கமலா தியேட்டர் பகுதியில் கண்காணித்தனர்.