வாஷிங்டன்: நிலவில் ஆராய்வதற்காக ஆர்ட்டெமிஸ் - 1 ராக்கெட்டை இன்று காலையில் ஏவுவதற்கான 3வது முயற்சியில் நாசா ஈடுபட்டு வருகிறது. 53 ஆண்டுகள் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பி நீண்ட காலம் தங்க வைத்து ஆய்வு செய்வதற்காக ஆர்ட்டெமிஸ் என்ற பயண திட்டத்தை நாசா கையில் எடுத்துள்ளது. இந்த திட்டம் மூலம் 2025ம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இருமுறை ஆர்ட்டெமிஸ் - 1 ராக்கெட்டை ஏவும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், இன்று காலை 11:34 மணியளவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை நிலவுக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.