சென்னை: ஆண்ட்ரியா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: என் தோற்றத்தை வைத்து, நான் நகரத்து மாடர்ன் பெண் என்று நினைக்கிறார்கள். ஆனால், அரக்கோணத்தில் ஒரு சிறிய டவுனில் வளர்ந்து, ஒரே ஒரு அறை இருந்த வீடு, பின்னர் இரண்டு அறைகள் இருந்த வீடு, அதன் பின் ஒரு அப்பார்ட்மென்ட் என்று வாடகைக்கு இருந்து பின்னர் அதே அபார்ட்மென்ட்டை சொந்தமாக வாங்கி படிப்படியாக வளர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவள்.இதுவரை இரண்டே இரண்டு முறைதான் பஸ்சில் பயணம் செய்துள்ளேன். 11 வயது இருக்கும்போது வேளாங்கண்ணிக்கு பஸ்சில் சென்றபோது யாரோ என் முதுகில் கை வைப்பது போல் இருந்தது.