சென்னை எந்த மாவட்டத்தையும் அரசு புறக்கணிக்கவில்லை!: சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!! Jun 23, 2021 அரசு ஸ்டாலின் பாஜக சட்டப்பேரவை சென்னை முதல் அமைச்சர் எம்சி. கெ ஸ்டாலின் பரத்ய ஜனதா கோவை சென்னை: எந்த மாவட்டத்தையும் அரசு புறக்கணிக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை புறக்கணிக்கப்படவில்லை என்றும் கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வாக்களித்தவர்கள் பெருமைப்பட வேண்டும்; வாக்களிக்காதவர்கள் வருத்தப்படும் அளவிற்கு செயல்பட வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எல்லா மாவட்டங்களையும் ஒரே மாதிரியாகவே பார்ப்பதாகவும், கோவை மாவட்டம் புறக்கணிக்கபடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் இதனை தொடர்ந்து செயல்படுத்த அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் கோவை மக்கள் அதிகளவு பயன்பெறுவதோடு தமிழ்நாடு வளர்ச்சியடையும் என்றும் அவர் தெரிவித்தார். கோவைக்கு எய்ம்ஸ் கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்திய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எஸ்.பி. வேலுமணி குறிப்பிட்டுள்ளார். … The post எந்த மாவட்டத்தையும் அரசு புறக்கணிக்கவில்லை!: சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!! appeared first on Dinakaran.
கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110 கோடியில் நவீன வசதிகளுடன் 6 மாடியில் சிறப்பு மருத்துவமனை: விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டம் வடசென்னை மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு
மாநகராட்சி ஆணையர் பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி: காவல் நிலையத்தில் புகார்
பருவ மழை காலத்தில் வெள்ள நீர் விரைந்து வெளியேற வசதியாக நீர்நிலை, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி விரைவில் தொடக்கம்: அகற்றப்படும் குடும்பங்களுக்கு வேறு இடங்களில் வீடு ஒதுக்கீடு
திருவான்மியூரில் கழுத்து அறுத்து பெண் கொலை பக்கத்து வீட்டு சிறுவன், 2 நண்பர்களுடன் கைது: மது அருந்த, கஞ்சா புகைக்க தடையாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை