இஸ்லாமாபாத்: தனது ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னால் அமெரிக்க சதி இருப்பதாக புகார் கூறி வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான், தற்போது அமெரிக்காவுடன் இணக்கமான உறவு வேண்டும் என்று திடீர் பல்டி அடித்துள்ளார். பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமராக இருந்த போது, கடந்த ஏப்ரலில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் வெளியேற்றப்பட்டார். தனது தனிப்பட்ட வெளியுறவு கொள்கைகள் பிடிக்காமல் அப்போதைய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ், ராணுவத்துடன் சேர்ந்து அமெரிக்கா சதி செய்து அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டதாக இம்ரான் குற்றம்சாட்டினார்.