சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: மதம் மாறிய தலித்களுக்கும் தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் ஒன்றிய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்து சமுதாயத்தில் இருந்த அடக்குமுறை சூழல், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமுதாயத்திலும் இருந்தது என்பதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. ஆகவே, மதம் மாறிய தலித்களுக்கு தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து வழங்குவது அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.