மாலே: மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் ஏராளமானோர் தங்கி இருந்தனர். இந்த குடியிருப்பின் கீழ் பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். பலர் தீ விபத்தில் சிக்கினர். தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து தீயணைத்து பலரை மீட்டனர். இதுகுறித்து மாலேயில் இந்திய துாதரக உயர் அதிகாரி கூறுகையில்,‘தீ விபத்தில் 10 பேர் பலியாகினர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. பலியானோர்களில் 8 பேர் இந்தியர்கள், மற்றவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்,’என்றார்.