ஐதராபாத்: ‘டிஆர்எஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதில் தொடர்பா?’ என்பது குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை பரபரப்பு பேட்டியளித்து உள்ளார். மேலும், ‘தனது போன் ஒட்டு கேட்கப்படுகிறதா?’ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளார். தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜ்பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் எந்த பிரச்னை வந்தாலும் ராஜ்பவனுக்கு சென்று போராட்டம் நடத்த வேண்டும் என்கிறார்கள். மக்கள் இங்கு வருவதை யாரும் தடுக்கவில்லை. எம்எல்ஏக்கள் (டிஆர்எஸ்) பேரம் பேசப்பட்ட பண்ணை வீடு வழக்கிலும், ராஜ்பவனை இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதனால் தான் எனது முன்னாள் பாதுகாவலர் துஷாரை இந்த வழக்கில் கொண்டு வந்தனர்.