ஹைதராபாத்: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-எஸ் இம்மாத மத்தியில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் பெரும் முயற்சிக்கு பிறகு ராக்கெட் ஒன்றை வடிவமைத்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்ட சோதனைகளின் அடிப்படையில் அந்நிறுவனம் தயாரித்திருக்கும் நவீன ராக்கெட்டிற்கு விக்ரம்-எஸ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த ராக்கெட் வருகின்ற 12-ம் தேதி முதல் 16-ம் தேதிக்குள் விண்ணில் செலுத்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.