தமிழக அரசின் முன்னாள் கொறடா துரை கோவிந்தராஜன் உடல் நலக் குறைவால் நேற்று காலை காலமானார்: ஓபிஎஸ் அஞ்சலி

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தை சேர்ந்த  மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசின் முன்னாள் கொறடா துரை கோவிந்தராஜன் (90) உடல் நலக் குறைவு காரணமாக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நேற்று காலை  காலமானார்.  அவரின் பூத உடலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,  தேனி சட்டமன்ற உறுப்பினருமான  ஓ பன்னீர்செல்வம் நேரில் வந்து மலர்  வளையம்   மற்றும் மாலை அணிவித்து  அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் முன்னாள்   அதிமுக அமைச்சர்  வெள்ளமண்டி  நடராஜன்,  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்  ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம்,  தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார்,  அமமுக துணை பொது செயலாளர் ரங்கசாமி,   நாஞ்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ்  ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: