தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தை சேர்ந்த மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசின் முன்னாள் கொறடா துரை கோவிந்தராஜன் (90) உடல் நலக் குறைவு காரணமாக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நேற்று காலை காலமானார். அவரின் பூத உடலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தேனி சட்டமன்ற உறுப்பினருமான ஓ பன்னீர்செல்வம் நேரில் வந்து மலர் வளையம் மற்றும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.