சென்னை: ஒன்றிய வெறியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதியுள்ள கடித்தத்தில் கூறியுள்ளதாவது: பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் சிக்கிய இந்தக் கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் இருப்பதாகத் தெரிகிறது.