கொடைக்கானல் : கொடைக்கானலில் சாரல் மழை, கடும் குளிர் என காலநிலை மாறி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பகலில் தொடரும் மழையால், சுற்றிப் பார்க்க வழியின்றி சுற்றுலாப்பயணிகளும் ஏமாற்றமடைகின்றனர்.‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. பிற்பகலில், கொடைக்கானலில் வழக்கத்திற்கு மாறாக கடும் குளிர் நிலவியது. மழையையும், குளிரையும் பொருட்படுத்தாமல் கொடைக்கானலுக்கு வார விடுமுறையை ரசிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்தனர்.