நைரோபி: தான்சானியாவில் ஏரியில் விழுந்து சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியாகினர். அதில் பயணித்த 26 பேர் மீட்கப்பட்டனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி 43 பயணிகளுடன் நேற்று காலை புறப்பட்ட உள்நாட்டு விமானம், 328 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் பெரும்பகுதி தண்ணீரில் மூழ்கியது.