வேதாரண்யம் அருகே படகு பழுதாகி கடலில் தவித்த 5 மீனவர்கள் மீட்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே  கடலில் படகு பழுதானதால் தத்தளித்த நாகை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை உள்ளது. இங்கு தற்போது மீன்பிடி சீசன் காலமாகும். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடிக்க சென்றனர்.  

கடந்த 4ம் தேதி மாலை இவர்கள் கடலில் தங்கி மீன் பிடித்தபோது, திடீரென படகு பழுதாகி நின்றது. இதனால் மீனவர்கள் கரை திரும்ப முடியாமல்  தத்தளித்தனர். இதுகுறித்து கடலோர காவல் படையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நேற்று காலை கடலோர காவல் படையினர் சென்று, கடலில் தத்தளித்த  முகிலன், கவுதமன் உள்ளிட்ட 5 மீனவர்களையும், படகையும் மீட்டு நாகை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

Related Stories: