வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கடலில் படகு பழுதானதால் தத்தளித்த நாகை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை உள்ளது. இங்கு தற்போது மீன்பிடி சீசன் காலமாகும். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடிக்க சென்றனர்.