திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் 70 ஆயிரத்து 263 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28 ஆயிரத்து 965 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை கணக்கிடும் பணி நேற்று முன்தினம் இரவு நடந்தது.