பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் சிறுத்தை புலி தாக்கியதில் 3 பேர் காயமடைந்தனர். கே.ஆர். நகர் பகுதிக்குள் மக்கள் சாலையில் நடந்து சென்றபோது அங்கு சிறுத்தை புலி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் சத்தம் எழுப்பியதால் வழியில் தென்பட்டவர்களை சிறுத்தைப்புலி தாக்க தொடங்கியது. ஒருசிலர் வீட்டு சுவரில் ஏறி மொட்டை மாடிக்கு சென்று தப்பினர்.