மன்னார்குடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய “மகாத்மா மண்ணில் மதவெறி” என்ற நூலின் அறிமுக விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட மையத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் மன்னார்குடியில் நேற்று நடந்தது. ஜி.ராமகிருஷ்ணன் ஏற்புரை வழங்கி பேசியதாவது: இந்துத்துவம் எனும் பாசிசத்தின் ஆட்சி தொடர்ந்து நடந்தால் நாடாளுமன்றம் என்ற கட்டிடம் மட்டும் தான் இனி இருக்கும். ஜனநாயகம் என்பது இருக்காது.