புதுடெல்லி: ‘ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி,’ என தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, பாகிஸ்தான் - சீனா வெளியிட்டுள்ள கூட்டறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 2 நாள் பயணமாக சீனா சென்றபோது, சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஜம்மு காஷ்மீர் குறித்து இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘‘ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் - சீனா வெளியிட்ட கூட்டறிக்கையை ஒன்றிய அரசு நிராகரிக்கிறது.