சென்னை: திமுக அயலக அணி சார்பில் திமுக முப்பெரும் விழா குவைத்தில் நடந்தது. இதில் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா, திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் கலந்து கொண்டனர். அப்போது வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் நல சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர். வெளிநாடு வாழ் தமிழர் நல சங்கம் முன்னெடுத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை கோரி நடத்தப்பட்டு வரும் பிரசார இயக்கம் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.