சென்னை: டிவிட்டர் பக்கத்தில் மத உணர்வுகளுக்கு எதிராக பதிவு செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜ மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாராயணன் திருப்பதி நேற்று அளித்துள்ள புகார்: சென்னை உயர் நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணிக்கு அனுமதி அளித்த நாள் அன்று, சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ‘நவம்பர் 6ம் நாள் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மனுஸ்மிருதிகளை அச்சிட்டு மக்களுக்கு விநியோகம் செய்ய இருக்கிறோம்’ என்று ஒரு வீடியோவுடன் ஒரு டிவிட் பதிவிட்டுள்ளார்.