காஞ்சிபுரம் : ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அந்த பகுதி தனியாருக்கு சொந்தமான பகுதியில் மக்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்களை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாரிகள் லட்சுமிபுரம் வரவிருப்பதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.