மதுரை: கரூர்-அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வேக தடையை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வேகத்தடையை நீக்க வேண்டும் என்று மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். விபத்து பகுதி என்பதால் வேகத்தடைகளை நீக்கியதற்கு அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.