கெவாடியா: குஜராத்தில் நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ‘மோர்வி கேபிள் பாலம் விபத்தால் கடும் துயரத்தில் உள்ளேன்’ என தழுதழுத்த குரலில் உருக்கமாக பேசினார். விரைவில் தேர்தல் நடக்க உள்ள குஜராத் மாநிலத்திற்கு பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்றுள்ளார். தனது பயணத்தின் 2வது நாளான நேற்று, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, கெவாடியாவில் படேல் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின், மோர்பி கேபிள் பாலம் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பனஸ்கந்தா பகுதியில் ரூ. 8,000 கோடியில் நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், ‘‘மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து பொதுமக்கள் பலர் பலியாகி உள்ளனர். அந்த சம்பவத்தால் நான் மிகவும் துயரம் அடைந்துள்ளேன்.