பெர்த்: தனது ஓட்டல் அறையில் அத்துமீறி நுழைந்து வீடீயோ எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டதை ஏற்க முடியாது என்று கோஹ்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பையில் விளையாடி வரும் கோஹ்லி, சமீபத்திய போட்டிக்காக பெர்த் நகரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். கோஹ்லி இல்லாதபோது, அவரது அறையை முழுவதுமாக வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் யாரோ வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில், அது குறித்து கோஹ்லி பதிந்த தகவல் விவரம்: ரசிகர்கள் தங்கள் அபிமான வீரர்களை பார்க்கும்போது மகிழ்ச்சி அடைவார்கள்.