சென்னை: தமிழர் தாயகம் உருவான நாள் இன்று. எல்லை போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழகம் பல பகுதிகளை இழந்தது. தமிழர் தாயகத்தின் எல்லைகளை வரையறுக்க வடக்கு எல்லை போராட்டமும், தெற்கு எல்லை போராட்டமும் மிக வீரியமாக முன்னெடுக்கப்பட்டன. மார்ஷல் நேசமணி, எஸ்.சாம் நத்தானியல், பி.எஸ்.மணி உள்ளிட்ட தலைவர்கள் மக்களை திரட்டி, தெற்கு எல்லை போராட்டத்தை நடத்தினர். போராட்ட களத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.