திருத்தணி அருகே டிரான்ஸ்பார்மர் மீது தனியார் பேருந்து மோதல் : 10 பேர் படுகாயம்

திருத்தணி: திருத்தணி அருகே நேற்று மாலை மின் டிரான்ஸ்பார்மர்மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி செல்லும் ஒரு தனியார் பேருந்து நேற்று மாலை திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை பேருந்து நிறுத்த பகுதியில் வந்தது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதுவதை தவிர்க்க, பேருந்தை டிரைவர் இடதுபக்கமாக திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த உயர் அழுத்த மின் டிரான்ஸ்பார்மரின்மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

இவ்விபத்தில், பேருந்துக்குள் இருந்த பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அவர்களை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்புகாரின்பேரில் திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: