பாட்னா: ‘ஆர்எஸ்எஸ் காபியை போன்றது, அதன் மீது மிதக்கும் நுரைதான் பாஜ,’ என்று பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் துணை தலைவராக இருந்தார். நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடினால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், காங்கிரசில் சேரும் முயற்சியும் பலன் அளிக்கவில்லை. தற்போது, பீகாரில் அவர் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘மோடி என்ற பலமான சக்தியை தடுத்து நிறுத்த ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணி பலன் அளிக்குமா? என்று கூற முடியாது.