சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர்(பரங்கிமலை கிழக்கு, மேற்கு மண்டலங்கள்), ஆலந்தூர்(கண்டோன்மெண்ட் மண்டலம்), பல்லாவரம், தாம்பரம் ஆகியதொகுதிகள் அடங்கும். இதன் தலைவராக ஏ.வேதசுப்பிரமணியம் நியமிக்கப்படுகிறார். செங்கல்பட்டு தெற்கு, செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர்(எஸ்சி), மதுராந்தகம் தொகுதிகள். இதன் தலைவராக பி.ஜி.மோகனராஜா நியமனம்.திருநெல்வேலி தெற்கு (நாங்குனேரி, ராதாபுரம் தொகுதிகள்) தலைவர்-எஸ்.பி.தமிழ் செல்வன், திருநெல்வேலி வடக்கு (திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை தொகுதி) தலைவர்-ஏ.தயா சங்கர், மதுரை நகர்(மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை சென்ட்ரல், மதுரை மேற்கு தொகுதிகள்)தலைவர்- மகா சுசீந்திரன், மதுரை கிழக்கு(மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான்(தனி) தொகுதி) தலைவர்-ஏ.பி.ராஜசிம்மன்.