திருமலை: திருப்பதியில் டிசம்பர் 1ம் தேதி விஐபி தரிசன நேரம் மாற்றப்பட உள்ளது. திருமலை அன்னமையா பவனில் திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று அளித்த பேட்டி வருமாறு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தாண்டு ஏப்ரல் 12ம் தேதி வரை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்கான நேர ஒதுக்கீடு இலவச டிக்கெட் வழங்கும் முறையை நிறுத்தியது. பல பக்தர்கள் தொடர்ந்து மீண்டும் நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்க வேண்டும் என கேட்டனர். இதையடுத்து, அறங்காவலர் குழு கூட்டத்தில் மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டது. திருப்பதி பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை மற்றும் ரயில் நிலைய பின்புறம் உள்ள 2வது சத்திரம் ஆகிய இடங்களில் இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் நவம்பர் 1ம் தேதி முதல் வழங்கப்படும். தினமும் டிக்கெட் உள்ள வரை வழங்கப்படும்.