திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே படியில் தொங்கியபடி பயணித்ததை தட்டி கேட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். திருத்தணியில் இருந்து காலையில் வழக்கம் போல அத்திமாஞ்சேரி பேட்டை நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. கே.ஜி. கண்டிகை நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் ஏறினர். பேருந்தில் இருக்கைகள் காலியாக இருந்தபோதும், மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ததால் ஓட்டுநர் அவர்களை உள்ளே வருமாறு அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஓட்டுநர் ஹேமாத்ரியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.