கோவை: கோவை சம்பவத்தில் போலீசாரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வழக்கை என்.ஐ.ஏ.க்கு மாற்றுவது நல்ல முடிவு. கோவை கார் வெடிப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். உளவுத்துறையில் உள்ள குறைபாடுகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.