விடாமல் பெய்யும் கனமழை: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தொடர் மழையின் காரணமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக  தொடர் மழையின் காரணமாகவும்  ஒரு நாள் தூத்துக்குடியில் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் கடந்த 23ஆம் தேதியுடன் இந்திய பகுதிகளிலிருந்து விலகிவிட்டது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.  இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 45 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பதிவாகி இருக்கிறது.  

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் வத்திராயிருப்பு பகுதியில் 4 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில்  3 செ.மீ., கடம்பூரில், ராஜபாளையத்தில் தலா 2 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது. வழக்கமாக தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகம் அதிக மழையை பெறும்.  வடகிழக்கு பருவ மழையை தமிழ்நாடு, புதுச்சேரி எதிர்பார்த்து இருக்கின்றன. 

Related Stories: