மதுரை: உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்படி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை இல்லை. எனவே, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அதிக திறன் கொண்ட மருந்துகளை பயன்படுத்தி, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.