வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசி மட்டுமே தீர்வாகும் என நிபுணர்கள் பரிந்துரைத்தனர். இதன் காரணமாக பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உற்பத்தி செய்யத்தொடங்கின. இந்தியாவிலும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பது உலக அளவில் பெரும் சாவாலாக இருந் த நிலையில் இந்தியா வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து கவனம் பெற்றது.