ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது; 2022-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் 28.10.2022 முதல் 30.10.2022 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ள தேவர் திருமகனாரின் குருபூஜையை விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான மதுபானக்கூடங்களும் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 உரிமத்தலங்களையும் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது எனத் தெரிவிக்கப்படுகிறது.