ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்.28,29,30 ஆகிய தேதிகளில் மதுபான கடை மூடப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது; 2022-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் 28.10.2022 முதல் 30.10.2022 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ள தேவர் திருமகனாரின் குருபூஜையை விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான மதுபானக்கூடங்களும் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 உரிமத்தலங்களையும் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

சில்லறை விற்பனைக் கடைகளும், அதனுடன் இணைந்த விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும், மதுபான வகைகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஒரு இடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: