கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த தாயை அடித்து கொலை செய்த 2 மகன்கள், மருமகள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னசேலம் அடுத்த பாக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த வேலம்மாள் என்பவரை கொலை செய்யப்பட்டவர் ஆவர். கணவர் இறந்த நிலையில் இவருக்கு சொந்தமான 1.80 ஏக்கர் நிலம் மற்றும் கடன் 16 லட்சம் ரூபாயை பிரிப்பதில் 2 மகன்கள் இடையே மோதல் ஏற்பட்டது.