பத்ரக்: ஒடிசா மாநிலத்தில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். ஒடிசா மாநிலம், பத்ரக்கில் இருந்து காரக்பூர் இடையே மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பகானாக ரயில் நிலையத்துக்கு அருகே வந்த போது கடைசி பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதையடுத்து ரயிலை நிறுத்த ஓட்டுனருக்கு ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவசரகால பிரேக்கை பயன்படுத்தி ரயில் நிறுத்தப்பட்டது.