பாட்னா: பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் உத்வந்த் நகரை சேர்ந்த 5ம் வகுப்பு பள்ளிச் சிறுவன் கடந்த 13ம் தேதி மாயமான நிலையில், கடந்த 17ம் தேதி அப்பகுதியில் ரயில் தண்டவாளத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு கிடந்தான். அவனது சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலையான மாணவனின் சகோதரி கடந்த 13ம் தேதி வகுப்பறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த மாணவன் தன் சகோதரியை நோக்கி தேர்வு துண்டுச்சீட்டு ஒன்றை வீசி உள்ளார். அந்த சீட்டு, வேறொரு மாணவி மீது விழுந்தது. அதை காதல் கடிதம் என தவறாக எண்ணிய மாணவி, அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கூறி உள்ளார்.
துண்டு சீட்டு வீசிய சிறுவன் படுகொலை: காதல் கடிதம் என தவறாக நினைத்து விபரீதம்
