புதுடெல்லி: தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று டெல்லியில் அளித்த பேட்டி: நெல்லுக்கான ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். காலம் கடந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற ஒன்றிய அரசு, கடந்த வாரம் தான் குழுவை அனுப்பி ஆய்வு செய்துள்ளது. ஆனால் தற்போது வரையில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், தமிழக விவசாயிகள் நெல்லை அறுவடை செய்து விட்டு செய்வது அறியாமல் திகைத்து வருகிறனர்.