சேலம்: தமிழகத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி செய்த பாஜ பிரமுகர், தனது பிறந்த நாளில் 200 பேருக்கு தலா 2 பவுன் நகையை பரிசாக கொடுத்துள்ளார். அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். சேலம் தாதகாப்பட்டி குமரன்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (51) பாஜ பிரமுகர். இவர், ஜஸ்ட்வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தினார். சேலம், வேலூர், திருவண்ணாமலை, நாகர்கோவில், திருச்சி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 35 ஆயிரம் பேரிடம் பணம் டெபாசிட் பெற்றுள்ளார். இதன்மூலம் மட்டும் ரூ.400 கோடி ரூபாயை வசூலித்துள்ளார்.