மாம்பழ ஃபலூடா

செய்முறை:

துளசி விதைகளை அரை கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஃபலூடா சேமியாவை வேகவத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் பாலை ஊற்றி, பாதியாகும் வரை சுண்டக் காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து, கரைந்த பின் இறக்கவும். பால் நன்கு ஆறிய பின் ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஊறிய துளசி விதைகளைப் போடவும். இதன் மீது ஜெல்லித் துண்டுகள், மாம்பழத் துண்டுகள், கண்டென்ஸ்டு மில்க், பலூடா சேமியா, மாம்பழக்கூழ், குளிர்ந்த பால் என ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். இறுதியாக மேலே ஐஸ்க்ரீம் வைத்து, அதன் மீது ரோஸ் சிரப் ஊற்றி, நட்ஸ் வகைகள் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

Related Stories: