அறந்தாங்கி: தமிழகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை கைது செய்வது, தாக்குவது, வலைகள், படகுகளை பறித்து விரட்டி அடிப்பது என இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 97 விசைப்படகுகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்களுடன் கோட்டைபட்டினம் சதாம் நகரை சேர்ந்த மனோகர் மகன் ரத்திஷ்(38) என்பவருக்கு சொந்தமான விசைபடகில் சதாம்நகரை சேர்ந்த நடராஜன் மகன் அருள்(36), கனகராஜ் மகன் அய்யப்பன்(30), சோனையன் மகன் சுந்தரம்(26) ஆகியோரும் சென்றனர்.