சுற்றுலாத்தலமாக மாறிய ஏரியூர் கண்மாய்: குடும்பம் குடும்பமாக நீராடி மகிழ்ந்த மக்கள்!!

சிவகங்கை: சிவகங்கை அருகே கண்மாய் நிறைந்து அதிலிருந்து வெளியேறி அருவி போல கொட்டும் தண்ணீரில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். திண்டுக்கல், தேனி, மதுரை பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏரியூரில் ஏரிகண்மாய் மூன்றாவது முறையாக நிரம்பி மறுகால் பாய்கிறது.

227 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியூர் கண்மாய், இதிலிருந்து வெளியேறும் உபரி நீர் அருவி போல கொட்டுவதால் மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு நீராடி மகிழ்கின்றனர்.

சிவகங்கை, மதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் ஏராளமானோர் ஏரியூர் கண்மாயிலிருந்து மறுகால் பாயும் தண்ணீரை பார்க்க கடந்த மூன்று நாட்களாக கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். மேலும் இதையொட்டிய பகுதிகளில் திடீர் கடைகளும் முளைத்துள்ளன. 

Related Stories: