திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்குபாளையம் பகுதியில் சாலையோரம் நேற்று காலை பச்சிளங்குழந்தை இறந்து கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு 7 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது.