ஏலகிரி: சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் நிலாவூர் ஏரி, மங்கலம் ஏரி தூர்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஏலகிரி மலையில் நிலாவூர், மங்கலம் போன்ற பகுதிகளில் ஏரிகள் அமைந்துள்ளன. இது மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் ஏரிகள் பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இந்த ஏரிகளில் உள்ள தண்ணீர் பாசைகள் நிறைந்தும், செடிகள் வளர்ந்தும் கருப்பு நிறத்தில் தண்ணீர் காணப்படுகிறது.