சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் “சென்னை மாநகர கூட்டமைப்பு திட்டம்” மற்றும் இந்திய அரசின் “நிர்பயா” திட்டங்களின் கீழ் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் தமிழ்நாடு அரசின் மூலம் “பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்” உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த ஆய்வகத்திற்கு இலச்சினை (லோகோ) வடிவமைக்கும் பணி பொதுமக்களின் பங்களிப்போடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதை உருவாக்குவதில் அதன் தோற்றம், குறிக்கோள் மற்றும் முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியவையாக அமைய வேண்டும். இதுகுறித்து ஆர்வமுள்ளவர்கள் தங்களுடைய சிறந்த திறனை பயன்படுத்தி இலச்சினையை உருவாக்கி மாநகராட்சிக்கு suggestions.gpl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் படைப்புகளை அனுப்பலாம்.