இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையின் மேற்கூரையின் மீது 500க்கும் மேற்பட்ட உடல்கள் நிர்வாண நிலையில் குப்பைபோல் வீசப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில், முல்தான் நகரத்தில் நிஷ்தார் மருத்துவ பல்கலைக் கழக மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உடற்கூறு செய்யப்படும் மையத்தின் மேற்கூரையின் மேல் 500க்கும் மேற்பட்ட மனித உடல்கள், நிர்வாணமாக சிதைந்த நிலையில் குப்பைப்போல் வீசப்பட்டு கிடப்பதாக தகவல்கள் வெளியானது.