சேலம் : ஆத்தூரில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் ராமநாயகன் பாளையம் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சின்ன கல்வராயன் மலை பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு சின்ன கல்வராயன் மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள சிற்றாறு, காட்டாறு ஆறுகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலையில், ஆத்தூர் ராமநாயகன் பாளையம் அருகே உள்ள கல்லாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள சிற்றாறுகள் நிரம்பி ஆத்தூர் வசிஷ்ட நதிக்கு தற்போது தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டு இருக்கிறது.