ஆர்எஸ்எஸ் பெண்கள் அமைப்பு பேரணிக்கு தடை

குலசேகரம்: ஆர்எஸ்எஸ்சின் மகளிர் அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நேற்று  அணிவகுப்பு ஊர்வலத்துக்கு  அனுமதி  கோரப்பட்டிருந்து. இந்த  நிகழ்ச்சியில் 1,320 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொள்வதாக  இருந்தது. ஆனால் மாவட்ட எஸ்பி ஹரிகிரன் பிரசாத் உத்தரவின்பேரில், தக்கலை டி.எஸ்.பி கணேசன் இந்த பேரணிக்கு தடை உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்ற உத்தரவின் படி இப்போது பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று ராஷ்டிர சேவிகா சமிதி நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து ஊர்வலம் நடத்தப்படவில்லை.

Related Stories: